Sunday, October 26, 2014

அக்டோபர் 21 நிகழ்வுகள்

1520 - பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
1805 - ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா நெப்போலியனின் பெரும் இராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.
1824 - ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1837 - அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.
1854 - புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
1876 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.
1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
1892 - உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
1895 - ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
1944 - கிறகுஜேவாச் படுகொலைகள்: நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரை படுகொலைச் செய்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: முதலாவது கமிகசே ஜப்பானிய விமானத் தற்கொலைத் தாக்குதல், அவுஸ்திரேலிய கப்பல் மீது நடத்தப்பட்டது.
1945 - பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1966 - வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.
1969 - சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார்.
1983 - நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.
1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கோல்லப்பட்டனர்.
1994 - சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.

பிறப்புக்கள்
1833 - அல்பிரட் நோபல், சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ 1896)
1925 - சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி
1937 - தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)

இறப்புகள்
1835 - முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1776)

சிறப்பு நாள்
ஆப்பிள் நாள்

No comments:

Post a Comment