Thursday, November 6, 2014

அக்டோபர் 31 நிகழ்வுகள்

அக்டோபர் 31 நிகழ்வுகள்

475 – ரோமுலஸ் ஆகுஸ்டலஸ் ரோமப் பேரராசன் ஆனான்.
1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1803 - கப்டன் ட்றைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளைத் தாக்கினர். பலர் கொல்லப்ப்பட்டனர்[1]
1863 - நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் "வைக்காட்டொ" என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்பமானது.
1864 – நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.
1876 - இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 200,000 பேர் வரை இறந்தனர்.
1913 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1941 – இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1954 - அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 - ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வா யைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1961 - ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1963 - இண்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1968 – வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.
1969 - வோல் மார்ட் தொடங்கப்பட்டது.
1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.
1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1994 - அமெரிக்க விமானம் ஒன்று கடும் பனி காரணமாக இண்டியானாவில் விபத்துக்குள்ளாகியதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
1996 - விமானம் ஒன்று பிரேசிலில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
1999 - எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் கொல்லப்பட்டனர்.
2000 - சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
2000 - வடக்கு அங்கோலாவில் தனியார் அண்டோனொவ் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.

பிறப்புக்கள்
1795 - ஜோன் கீற்ஸ், ஆங்கிலக் கவிஞர் (இ. 1821).
1875 - வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)
1922 - நொரொடோம் சிஹானூக், கம்போடிய அரசர்
1930 - மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளிவீரர்
1933 - துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்

இறப்புகள்
1811 - பண்டார வன்னியன், வன்னி மன்னன்.
1975 - எஸ். டி. பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1906)
1984 - இந்திரா காந்தி, இந்தியப் பிரதம மந்திரி (பி. 1917).
1986 - ரொபேர்ட் மலிக்கென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1896)
2003 - செம்மாங்குடி சிறிநிவாச ஐயர், இந்திய கர்நாடக இசைப் பாடகர், (பி. 1908).
2005 - அம்ரிதா பிரீதம், பஞ்சாபி எழுத்தாளர் (பி. 1919)
2005 - பி. லீலா, பின்னணிப் பாடகி

சிறப்பு நாள்
ஹாலோவீன்

No comments:

Post a Comment