Thursday, October 9, 2014

அக்டோபர் 10 நிகழ்வுகள்

அக்டோபர் 10 நிகழ்வுகள்

680 - முகமது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அநுசரிக்கப்பட்டு வருகிறது.
1575 - பிரான்சில் ரோமன் கத்தோலிக்கப் படைகள் புரட்டஸ்தாந்தர்களைத் தோற்கடித்தனர்.
1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1631 - சாக்சனி இராணுவத்தினர் பிராக் நகரைக் கைப்பற்றினர்.
1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
1868 - கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் "லாடெமஹாகுவா" பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
1911 - வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.
1916 - வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.
1942 - சோவியத் ஒன்றியம் ஆஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.
1945 - போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.
1949 - விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
1957 - ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.
1967 - விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமுல் படுத்தப்பட்டது.
1970 - பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1970 - மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.
1971 - விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.
1986 - 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர்.
1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
1991 - தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பிறப்புக்கள்
1822 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தவர், (இ. 1884)
1888 - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (இ. 1972)
1906 - ஆர். கே. நாராயண், இந்திய எழுத்தாளர் (பி. 2001)
1908 - கே. பி. சுந்தராம்பாள், தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980)
1913 - கிளோட் சைமன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 2005)
1930 - ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (இ. 2008)
1936 - கெரார்டு எர்ட்டில், ஜெர்மனிய வேதியியல் அறிஞர்
1960 - வைகைப்புயல் வடிவேலு , இந்திய தமிழ் நகைச்சுவை நடிகர்


இறப்புகள்
1659 - ஏபெல் டாஸ்மான், டச்சு கடல் ஆராய்ச்சியாளர், நாடுகாண் பயணி (பி. 1603)

1973 - பாபநாசம் சிவன், கருநாடக இசை, தமிழிசை அறிஞர் (பி. 1890)
1974 - மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)
2000 - சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் பிரதம மந்திரி, உலகின் முதல் பெண் பிரதமர், (பி. 1916)

சிறப்பு நாள்
பீஜி - குடியரசு நாள் (1970)
தமிழீழம் - தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்


No comments:

Post a Comment