Tuesday, October 7, 2014

அக்டோபர் 8 நிகழ்வுகள



1573 - எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் வெற்றியைப் பெற்றது.
1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1813 - பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1821 - பெருவில் ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படையை அமைத்தது.
1860 - லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ நகர்களுக்கிடையே மின்சாரத் தந்தி அறிமுகமானது.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர்.
1871 - சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1895 - கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டாள்.
1912 - முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.
1918 - இரண்டாம் உலகப் போர் - பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் "அல்வின் யோர்க்" தனியாளாக 25 ஜெர்மனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
1932 - இந்திய வான்படை நிறுவப்பட்டது.
1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
1944 - குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் இற்கருகில் இடம்பெற்றது.
1952 - லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
1962 - அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1967 - கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.
1973 - சூயஸ் கால்வாயின் இஸ்ரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இஸ்ரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.
1982 - சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.
1987 - விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1990 - ஜெருசலேமில் இஸ்ரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலஸ்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2001 - இத்தாலியின் மிலான் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - 03:50 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்க்கு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.
2006 - காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.

பிறப்புக்கள்
1922 - கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர் (இ. 2001)
1924 - திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (இ. 2006)
1932 - கென்னத் அப்பெல், அமெரிக்கக் கணிதவியலாளர்
1935 - மில்கா சிங், இந்திய தடகள விளையாட்டு வீரர்
1950 - சு. கலிவரதன், தமிழக எழுத்தாளர்
1970 - மேட் டாமன், அமெரிக்க நடிகர்
1971 - பா. ராகவன், தமிழக எழுத்தாளர்
1983 - அபிசேக் நாயர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
1936 - பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (பி. 1880)
1959 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930)
1967 - கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1883)
1979 - ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (பி. 1902)
2003 - வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
2011 - பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (பி. 1956)

சிறப்பு நாள்
குரொவேசியா - விடுதலை நாள்
ஐக்கிய அமெரிக்கா - கொலம்பஸ் நாள்
இந்தியா - விமானப் படை நாள்

No comments:

Post a Comment